நீட் தேர்வை எதிர்த்து திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்! தொமுச மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளருமான டி .கே. டி.மு. நாகராசன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமாகிய, மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்திடும்
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு துணைநிற்கும் ஆளுநரையும் கண்டித்து
திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் திருப்பூர் இரயில் நிலையம் அருகில், பெரியார், அண்ணா சிலை முன்பு 20-9-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதால் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் திமுக நிர்வாகிகள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், திமுக உடன்பிறப்புகள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என்று தனது அறிக்கையில் டி.கே.டி.மு.நாகராசன் கூறியுள்ளார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக