கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதனை வன ஊழியர்கள் ரோந்து பணிக்கு சென்ற போது பார்த்து உள்ளனர் இறந்த நபர் 10 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலை செய்து கொண்ட நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக