நெமிலி அருகே காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்திய பெ. வடிவேலு!
ராணிப்பேட்டை மாவட்டம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 87 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மையங்களில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து நெமிலி அடுத்த கீழ்விதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான. பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார். இதில் ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர். மணிமேகலை வெங்கடேசன், சத்துணவு மேலாளர். தாஸ் பிரகாஷ், டில்லி ராணி, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக