கோவை மாவட்டத்தில் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

கோவை மாவட்டத்தில் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா!


 அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா! தமிழகம் முழுவதும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின்  கிளைகள் செயல்பட்டு வரும் நிலையில் புதியதாக சங்க கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் சங்க புதிய கிளைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்ட, அன்னூர் ஒன்றியம் கஞ்சம்பள்ளி பிரிவில் சங்க கிளை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.  K.S. குருசாமி அன்னூர் ஒன்றிய தலைவர் தலைமையில் ,  வேலாயுதம் அவர்கள்  முன்னிலையில்  சங்கத்தின் நிறுவனத் தலைவர் G.K. விவசாயமணி (எ) G. சுப்பிரமணி அவர்கள் சங்க அலுவலகத்தை  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு  பச்சை துண்டு அனுவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவருக்கும்  காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க  நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad