வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆளுநர் ரவியை கண்டித்தும் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆளுநர் ரவியை கண்டித்தும் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் நீட் தேர்வால் 23 மாணவர்கள் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர் எனவே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியயும், நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியை  கண்டித்தும் மே 17 இயக்கத்தின் சார்பில் வாலாஜா பேருந்து நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

இந்தப் போராட்டத்தில் சிறுத்தைகளின் இராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ழுற்போக்கு மாணவர் கழகம்,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திராவிட இயக்கம், பெரியாரிய பொதுவுடமைக் கட்சியினர் உள்ளிட்ட கட்சி மற்றும் இயக்கங்களிலிருந்து, நரசிங்கபுரம் பெல்.Y.தினகரன், மேட்டுத்தெங்கால் முருகவேல், நவீன் குமார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், திமுகவின் முன்னாள் நகர செயலாளர்  புகழேந்தி, ம.தி.மு.க மாவட்ட செயலாளர் தோழர் உதயகுமார், திராவிடர் கழக மாவட்ட துணை தலைவர் பொன். வெங்கடேசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி குப்பன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தோழர் மஸ்தான்,மற்றும் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/