திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.  சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும் . இதில் சுமார் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணைக்கு 360 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 114.80 அடியை எட்டியுள்ளது. அதாவது 6399 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

செங்கம் செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/