சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக முதலமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி இரண்டாம்கட்ட விரிவாக்க திட்டத்தை இழிவாக சித்தரித்து செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையை வன்மையாக கண்டிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் திரு அதியமான் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் தினமலர் பத்திரிகை இதழ்கள் மற்றும் போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் வழியுருத்தியதோடு, தினமலர் நிர்வாகம் தார்மீக பொறுப்பேற்று மண்ணிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
இந்நிகழ்வில் கழக முன்னோடி திரு பால்பாண்டியன், 2 ஆவது வார்டு செயலாளர் திரு திருமுருகன், நகர மாணவரணி அமைப்பாளர் திரு ரா. கார்த்திக், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் திரு பாலா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் திரு சதீஷ்குமார், நகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் திரு பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகி திரு பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக