கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் 201 வது அவதாரதின விழா. அவரது பிறந்த இல்லத்தில் நடைபெற்றது. 1823 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி ராமையாபிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்த வள்ளலார் பிறந்ததிலிருந்து அவருக்குள் தன்னொளியாக வாழ்வியல் ஞானம் குடி கொண்டிருந்தது.
இதனையடுத்து மனித வாழ்வின் பல்வேறு தத்துவங்களை அறிந்து மனித வாழ்வியலுக்கு அதனை எடுத்துரைத்து வாழ்வியல் நெறிமுறைகளை உருவாக்கினார். அதில் இறைவன் எங்கும் ஜோதி வடிவாய் நிறைந்திருக்கிறார். உலகுக்கு ஜீவகாருண்யத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அவரது கொள்கைகளில் உயிர்க்கொல்லாமை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றும்.அனைவரும் பசிப்பிணியற்று இன்புற்றிருக்கருக்கவேண்டும் என மனித குலத்துக்கு மிகப்பெரிய தத்துவங்களை எடுத்துக் கூறிய வள்ளல் பெருமானின் அவதார தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தின் முன்புள்ள கொடி மரத்தில் மஞ்சள், வெண்மை நிற சன்மார்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருந்திரலான பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்திற்கு பிறகு தொட்டிலில் வைக்கப்பட்ட வள்ளலாரின் குழந்தை வடிவ திருவுருவ சிலைக்கு தீபம் காட்டப்பட்டும் அணையா தீபத்தின் முன்பும் வழிபாடு நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக