கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே முடிகண்ட நல்லூர் கிராமத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமை வகித்தார்.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன் ராம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக அமைப்புச் செயலாளரும், கடலூர் கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளருமான ராயபுரம் மனோ, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக