முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் - இன் 107ம் ஆண்டு பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் - இன் 107ம் ஆண்டு பிறந்தநாள் விழா.

மக்கள் மனங்களில் என்றும் வாழும் முன்னாள் முதலமைச்சர் பொன் மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107ம் ஆண்டு பிறந்தநாள் விழா.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி  ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனையின் படி ஆழ்வார்திருநகரி நகர கழகம் சார்பில் நகர செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகர அவைத்தலைவர் 
எம் ஜி ஆர் முரட்டு பக்தன் இராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். 

இந்நிகழ்வில் கேடிசி பெரியசாமி, இசக்கியப்பன், அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன், நெல்லை ஆறுமுகம், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி, நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் இளைஞரணி செயலாளர் லட்சுமணன், முஜிபுர் ரகுமான் ஜவ்பர்சாதிக், லட்சுமணன்
சாமி சடகோபன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



பெரியதாழையில் நடைபெற்ற எம் ஜி ஆர் பிறந்த நாள் விழாவில், எம் ஜி ஆர் சிலைக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் இணைச் செயலாளர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமையில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி நகர செயலாளர் செந்தில் ராஜ குமார். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கினார்கள். உடன் ஆழ்வார்திருநகரி நகர அம்மா பேரவைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி சாத்தான்குளம் ஒன்றிய முன்னாள் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பெரிய தாழை கணேசபாண்டியன், தாழை வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/