தூத்துக்குடி மாவட்டம், ஜன.29, காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் 10 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று 29.1.24 மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.9.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மது ஆலிம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக