தூத்துக்குடி மாவட்டம், ஜன. தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு.
ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி இன்று (20.01.2024) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக