தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம், ஏரலில் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் இன்று ஜன.27 மாலை காந்தி சிலை மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மகாத்மா காந்தி விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து கூறியுள்ளதையும் மற்றும் திருவள்ளுவரை பற்றியும் தவறாக கருத்து தெரிவித்து பேசியதாகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏரல் நகர காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் ஆளுநர்
ஆர்.என். ரவி தமிழ்நாட்டை விட்டு திரும்பப் பெற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய, நகர காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக