பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுனர்களுக்கு ஓர்நற்செய்தி:
பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுனர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுனர்களுக்காக தொகுப்பூதியம் மாதம் 10,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ₹2500 ரூபாய் உயர்த்தப்பட்டு மாதம் 12,500 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது, இதனால் பயிற்றுநர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக