திருவெற்றியூர் H-8 போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்து அருணகிரி அவர்களின் ஆலோசனையின் படி தொடர்ந்து வடசென்னை பகுதியில் நிகழ்ந்து வரும் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள் அதிக அளவில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் எல்லையம்மன் கோவில் அருகில் தலைக்கவசம் இன்றி இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அதனை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முறையாக தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு திருவொற்றியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாமுவேல் ரஞ்சித் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இதைப் போன்றே அனைவரும் முறையாக ஹெல்மெட் அணிந்து வந்தால் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்று உங்களைப் போன்றே அனைவரும் இந்த ஹெல்மெட் அணிதலை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக