சட்டம் பயின்று சொந்த ஊருக்கு திரும்பிய அவர் நெல்லையில் மூத்த வக்கீல் செல்வம் என்பவரிடம் ஜூனியர் ஆக சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்நாடு புதுச்சேரி பார் அசோசியேசன் மற்றும் மனிதநேயம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தார்.
தமது குடும்ப வறுமை சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரவு பகலாக படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது சகோதரி ஜெயச்சந்திரா குரூப் தேர்வில் பயின்று வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் ஜெயராமகிருஷ்ணன் எம்எஸ்சி கணிதம் படித்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வாகியுள்ள ஐயப்பனை, உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பேய்க்குளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக