திருநெல்வேலி மாவட்டம், மார்ச் 03, கூடன்குளம் அணுமின் நிலையத்தில் "B" பிரிவு வேலைகளுக்கு நடைபெறுகின்ற எழுத்துத் தேர்வினை ரத்து செய்து 1999ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி வேலை வாய்ப்புகள் வழங்குவது தொடர்பான சமாதான கூட்டம் இன்று சனிக்கிழமை (02.03.2024) வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாலை 4.30 மணியளவில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் கீழ்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் முடிவுகள் விபரம் பின்வருமாறு, 1999ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கும் "C" பிரிவில் பணியாளர்களாக தேர்வு செய்த பின்னர் "B" பிரிவிற்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
ஆகையால், இன்று (03.03.2024) நடைபெற இருந்த "B" பிரிவிற்கான தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக