வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில்.....
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி நல்லூரில் 11.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்எல்ஏ காந்திராஜன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, குத்து விளக்கேற்றி, பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி, புதிய அட்டைதாரர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் சண்முகவேல் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன், பொது விநியோகத் திட்ட அலுவலர் ராஜாங்கம், கள அலுவலர் இந்துமதி, திமுக மாவட்ட பிரதிநிதி ஓ.பி.பாலு, ஒன்றிய கவுன்சிலர் சத்தியபிரியா பாலமுருகன், முன்னாள் ஊராட்சி செயலாளர் முருகேசன், வர்த்தக அணி செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய இளைஞரணி சூர்யா, மலைச்சாமி, திருமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க செயலாளர் கணேசன் நன்றியுரை ஆற்றினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக