தூத்துக்குடி _ வீட்டிற்குள் ஏறி குதித்து திருட முயன்றவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மார்ச், 2024

தூத்துக்குடி _ வீட்டிற்குள் ஏறி குதித்து திருட முயன்றவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 07, மீனாட்சிபுரம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்தவர் கைது.


தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகன் சக்திவிக்னேஷ் (32) என்பவரது வீட்டிற்குள் நேற்று (06.03.2024) தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் மயிலன் (32) என்பவர் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரும்பு பொருட்களை திருட முயற்சித்துள்ளார். 


அப்போது வீட்டிற்குள் இருந்த சக்திவிக்னேஷ் மற்றும் பக்கத்தில் உள்ளவர்கள் சேர்ந்து மேற்படி மயிலனை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதுகுறித்து சக்திவிக்னேஷ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன் வழக்குபதிவு செய்து மயிலனை கைது செய்தார். 


மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட மயிலன் மீது ஏற்கனவே மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/