தூத்துக்குடி - வேட்புமனு தாக்கல் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

தூத்துக்குடி - வேட்புமனு தாக்கல் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.21, வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.


வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி 27.03.2024 அன்று வரை நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அதன் வளாக பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/