தூத்துக்குடி சாயர்புரம் போப் கல்லூரியின் இயற்பியல் நண்பர்கள் சங்கம் சார்பில் சென்னை மெரினாவில் தமிழ் மாணவர் ஜி.யு. போப்பின் 204 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும், உள்ளத்தால் தமிழராக வாழ்ந்த ஜி.யு.போப் தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர். திருக்குறளில் 1,330 குறள்களையும் முழுமையாக ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்ப்பு செய்தார். திருக்குறள் மட்டுமின்றி, நாலடியார், திருவாசகம்b முதலிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற பிறந்த தின விழாவில் ஜி.யு. போப்பின் திருஉருவச் சிலைக்கு சாயர்புரம் போப் கல்லூரி இயற்பியல் நண்பர்கள் சங்கத்தின் சென்னை உறுப்பினர்கள் சங்கர், பழனிசாமி, ஜெய்கர், அய்யப் பன், வேலுசாமி, சுகராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக