சென்னை காசிமேடு பகுதியில் நேற்று மாலை நேரத்தில் பிரபல ரவுடி தேசிங்கு ராஜா என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் தெருவின் அருகாமையில் அமைந்துள்ள தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை மருமநகர்கள்இரவு நேரத்தில் தீட்டு கொளுத்தி உள்ளனர்.
இதில் மூன்று இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின, மாலையில் கொலை நடந்த நிலையில் இரவு நேரத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதியில் கஞ்சா போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும் இதனை உடனடியாக காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் தாங்கள் கடின உழைப்பினால் வாங்கி சேர்க்கின்ற பொருட்களை இப்படி அவர்கள் சேதப்படுத்தி சென்று விடுவதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக