தூத்துக்குடி, ஏப்ரல் 9, பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்களை பொருத்துவது குறித்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அப்பயிற்சியயை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி (இன்று 09.04.24) நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுறைகள் வழங்கினார்.
பின்பு வரும் வழியில் ஆறுமுகநேரி சோதனைச்சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதையும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று 09.04.24 பார்வையிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக