சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது சென்னை வியாசர்பாடி தேபர் நகர் பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்த விழாவானது 20. 4.2024 அன்று மாலை கணபதி பூஜை உடன் துவங்கி இன்று 21.4.2024 காலை 7 மணி இரண்டாம் கால யோக பூஜையுடன் துவங்கி காலை 10 மணி அளவில் விமான கும்பாபிஷேகமும் 10:30 மணி அளவில் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் சிவகாமப்ரவீன வேத சிகா மரதான சம்பந்த குருக்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளை முன்னெடுத்து நடத்தினார், அம்மனை தரிசிப்பதற்காக வந்திருந்த பக்தர்களுக்கு கும்பாபிஷேகத்தில் பயன்படுத்தப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டதோடு சிறப்பு தரிசனமும் நடைபெற்றது. இவ்விழாவில் வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக