பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்- பால் கனகராஜ் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 ஏப்ரல், 2024

பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்- பால் கனகராஜ்


சென்னை தண்டையார்பேட்டை  வடசென்னை பாஜக தேர்தல் அலுவலகத்தில்  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் செய்தியாளர்கள் சந்தித்த போது வடசென்னை தொகுதிக்குட்பட்ட 1486 பூத்களில் ஓவ்வொரு மையத்திலும் குறைந்தது 100 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பாஜக ஆதரவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


திருவெற்றியூர் 7வார்டில் அதிகபட்சமாக486 பெயர்கள் இல்லை, தெரிவித்தார், மாற்றத்தை விரும்புவார்கள் 60% வாக்குகள் மாற்றத்திற்கு போதுமான சதவீதம் இல்லை, ஓட்டு போடாதவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசக்கூடாது.


அதிகாரிகள் தவறு செய்துள்ளனர்,மிகப்பெரிய கோபத்தை தருகிறது. வாக்களிக்காத வாக்காளர்கள் மீது வருத்தம் உள்ளது. மற்றப்படி வாக்களித்த அனைவரும் மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள். வட மாநிலத்தவர்கள், மார்வாடிகள் ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன.


வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவிற்கு வரவேண்டிய 1.5 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. பூத் மாறவில்லை, ஓட்டுகளே நீக்கப்பட்டுள்ளது. பெயர்கள் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடத்தில் உள்ளது ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/