ஆம்பூர் போக்குவரத்து காவல்நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப.,அவர்கள் இன்று (23.12.2024) நேரில் பார்வையிட்டார்.
அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பண்டிகை காலங்களில் ஆம்பூர் முக்கிய கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் முறைகள், போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக