வாணியம்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
_திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமம், பாலகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் மாலதி(எ) ஸ்ரீமதி (16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோா் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்._
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக