இந்த நிகழ்வில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட துறை சார்பாக மாணவ மாணவிகள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.
கல்லூரியின் மாணவ மாணவிகள் கிராம நிர்வாக அலுவலகம் தொடங்கி லூக்கா மருத்துவமனை வரை வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு துண்டு பிரதிகளை மக்களுக்கு கொடுத்தனர். இதில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஜெயக்குமார் ரூபன் அறிவுறுத்தலின்படி கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
வட்டாட்சியர் செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ஆண்டாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன் மற்றும் செந்தாமரை விழிப்புணர்வில் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவ மாணவிகளின் பங்கேற்பு ஏற்பாடுகளை ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரி வினோதா, நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஞானசெல்வன், உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், பேராசிரியர்கள் ஜேக்கப், சாம் ஜெனிஸ், ஜெனிபா அலுவலக உதவியாளர் ஞானராஜ் ஆகியோர் செய்திருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக