திருப்பூர் பிரிட்ஜ் காலனியில் அமைந்துள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்ளவும் மற்றும் புதிய கிளைகள் அமைத்திடவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆம்பூர்பட்டி ஊராட்சியில் புதிய கிளையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக