பிள்ளை போல வளர்த்த செடிகளை வெட்டிட்டானே! அவன் நல்லா இருப் பானா! கதறி அழுத மூதாட்டி! எஸ்பி அலுவலகத்தில் புகார்!
திருப்பத்தூர் , நவ 19 -
திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (வயது 51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அண்ணா துரையின் மச்சான் ஆன உதயகுமார் (வயது 35) என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் உதயகுமார் தன்னுடைய அம்மாவிற்கு சேர வேண்டிய சொத்து எனக் கூறிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதேபோல முறையான பத்திரம் பதிவு செய்துள்ள தால் தினகரனும் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார்
இந்த நில பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நேற்று இரவு உதய குமார் அத்துமீறி தினகரன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரம், கொய்யா செடி, எலுமிச்சை செடி, உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட செடிகளை வெட்டி வீசி சென்று உள்ளார். இதனை அறிந்த தினகரனின் தாயாரான ருக்மணி காலங்காலமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் ஊற்றி புள்ளை போல வளர்த்த செடி களை வெட்டிட்டானே? அவ நல்லா இருப் பானா? என கதறி அழுத்த சம்பவம் காண் போர் நெஞ்சை கண்கலங்க செய்தது மேலும் இதுகுறித்து திருப்பத் தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செடிகளை வெட்டிய உதயகுமார் மீது தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக