வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர்


வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர். குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் விசாரணை.

வாணியம்பாடி, ஜன.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் சரணாலயம் கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை  கருணை இல்லம்  முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே சென்று பார்த்த  போது இரு பெண் குழந்தைகள் அழுது கொண்டிருப்பதை பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ்க்கு தகவல் தெரிவித்தனர்.


டேவிட் சுபாஷ்  சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் இரு பெண் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பாக வைக்க கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.


பின்னர் போலீஸார் அங்குள்ள சிசி டிவி பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் 2 பெண் குழந்தைகளை விட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது.


மேலும் குழந்தைகளின் அருகே ஒரு பை கிடைத்தது. அந்த பையில் ஜோதி என்ற பெண்ணின் வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, பிஸ்கெட்கள், குழந்தைகளின் துணிகள் இருந்தது. அத்துடன் ஒரு துண்டு சீட்டில் ஒரு செல் போன் எண் இருந்தது.


போலிசார் அந்த செல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அந்த செல் போன் எண் குழந்தைகளின் பாட்டி என்பவரது என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் அவரிடம் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்


குழந்தைகளின் தந்தை ராஜேஷ் மற்றும் பாட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


அப்போது போலீஸார் அவர்ககளிடம்  விசாரணை நடத்திய போது ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 2 வயது பெண் குழந்தை பூர்த்தி வந்தனா, 11 மாத பெண் குழந்தை பிருந்தா என 2 பெண் குழந்தைகள் என்று தெரிய வந்தது .


மேலும் நேற்று பிற்பகல் முதல் தன் மனைவி ஜோதி மற்றும் 2 பெண் குழந்தைகள் காணாமல் போனதாகவும்,  அவர்களை தேடி வந்ததும் தெரியவந்தது.


மேலும்  குழந்தைகளின் தாய் ஜோதி எங்கே போனார், 2 பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad