விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை.
திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில், சில மாதங்களாக மண் அரிப்பு ஏற்பட்டு, பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை உள்ளது. கோவில் முன், 500 அடி நீளத்திற்கு, 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு யாரும் சென்றுவிடாதபடி கரையில் கம்புகளை கட்டி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மண் அரிப்பு பிரச்னையை தடுக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கவும், 700 மீட்டர் நீளத்திற்கு மணல் கொண்டு செயற்கையாக கடற்கரை உருவாக்கவும் ஐ.ஐ.டி., பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில் கனிமொழி எம்பி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று கடல் அரிப்பு பகுதியை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மேயர் ஜெகன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ஏபி.ரமேஷ், இளங்கோ, திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி, நகர திமுக செயலாளர் வாள்ஆர்.சுடலை, துணைச்செயலாளர் தோப்பூர் பெரு.மகராஜன், நகராட்சி 2வதுவார்டு கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின் கனிமொழி எம்பி கூறுகையில், கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக