திருப்பத்தூரில் திமுக மாணவரணி சார்பாக தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர், கழக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை குழுத் தலைவர் திரு திருச்சி சிவா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர், கிளை மற்றும் வார்டு கழக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக