காட்பாடி ,ஜன 3 -
வேலூர் மாவட்டம் காட்பாடி திமுக பிரமுகர்கள் வீடுகளில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை. 2019இல் நடந்த IT ரெய்டில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ₹11.48 கோடி சிக்கியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஏப்.18 தேர்தல் ரத்தாகவும் காரணமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் அப்போது திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது. இந்த சூழலில் தான் இன்று மீண்டும் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக