புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு !


ராணிப்பேட்டை , பிப் 15 -

ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வா மாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் crpf  அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது  வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட எஸ்யுவி வாகனத்தை ஒரு தற்கொலை குண்டுதாரி மோதியதில்  வாகனம் வெடித்து  சிதறி 40க்கும் மேற் பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்  இந்திய பாதுகாப்பு படையின் மீது நடத்தப்பட்ட இந்த மிக கொடூரமான தாக்குதல்
 நாட்டையே அதிர்ச்சடைய  செய்தது
 இந்த வீரர்களின்  தியாகத்தையும் அர்ப்பணைப்பையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி  இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்
அந்த வகையில் ஆற்காடு நகர பிஜேபி இளைஞர் அணி சார்பில்  புல்வாமா தாக்குதல் ஆறாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சி ற்க்கு ஆற்காடு நகர இளைஞரணி  தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார் நகர  தலைவர் பாஸ்கர்,  இளைஞரணி மாவட்ட தலைவர் முத்தரசு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜித், ஏஎஸ். ராஜசேகர் மாநில செயற் குழு உறுப்பினர் ஜிவி. பிரகாஷ், 
ஜி.தணிகாசலம்,ஏவி வரதன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத் தலைவர் நெமிலி பி.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு படை வீரர்களின் திருவுருவப படங்களுக்கு மலர் தூவி  மரியாதை செய்தார் அதனைத் தொடர்ந்து  நகர  பொதுச் செயலாளர் சுனில் குமார், சரவணன்,கமலக்கண்ணன், சிவராமகார்த்திக், ஆர். தாகூர்சுந்தர், நாவலன் உள்ளிட்ட ஏராளமான பிஜேபி பொறுப்பாளர்கள் வீரவணக்கம் செய்து  மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad