ராணிப்பேட்டை ,பிப் 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரசு ஊழியர் கூட்டமைப்பு ஆற்காடு வட்ட ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வுதியும் நடைமுறைப்படுத்துதல் இடைநிலை ஆசிரியர் முதுநிலை ஆசிரியர், அரசு ஊழிய கண்காணிப் பாளர்கள் ஆகியோர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் சரண் விடுப்பு தடை ஆணை நீக்குதல், தொடர் கல்வி துறையை பாதிக்கும் அரசாணை எண் 243 ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பி.தாண்டவராயன் தலைமை தாங்கினார், ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்,
மாநில ஒருங்கிணைப்பாளர் சி. சேகர் துவக்க உரையாற்றினார், முக்கிய பொறுப்பாளர்களான ஜோசப் கென்னடி, குணசேகரன், உதயகுமார், குப்பன், பாரி
பி ஜி.கார்த்திகேயன், டி.வெங்கடேசன், எம்.குமரன், பழனி, பழனிவேல், செல்வம், ராஜி, சையத்சிராஜுதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக