31.500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... இரண்டு பேர் கைது... கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

31.500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... இரண்டு பேர் கைது... கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி.

31.500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... இரண்டு பேர் கைது... கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
சமீபகாலமாக தொடர்ச்சியாக கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வந்தனர். கடந்த 26-04-2025 நேசமணி நகர் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட பகுதியில் 3.500 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு முருகன், பேச்சியப்பன்,
அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அடைக்கப்பட்ட நபர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்ற ரீதியில் விசாரணை முடிக்கிவிடப்பட்டது. அந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முக்கிய விநியோகஸ்தர்களாக இரண்டு பேர் விபரங்கள் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 31.500 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர் மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா தேவர் என்பவரின் மகன் அன்பழகன்(63), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் இசக்கி ராஜ் (53), ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எச்சரித்துள்ளார்


தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad