நாசரேத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற "மகோன்னத மிஷனரி மர்காஷிஸ் நூல் வெளியீட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

நாசரேத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற "மகோன்னத மிஷனரி மர்காஷிஸ் நூல் வெளியீட்டு விழா.

நாசரேத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற "மகோன்னத மிஷனரி மர்காஷிஸ் நூல் வெளியீட்டு விழா

நாசரேத், திருமறையூர், 28 ஏப்ரல் 2025:
நாசரேத்தின் தந்தை என்று போற்றப்படும் கனம் ஆர்தர் மர்காஷிஸ் அவர்களின் 117-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, முனைவர் டி. ஏ. கிறிஸ்துதாஸ் அவர்கள் எழுதிய மற்றும் மறு பதிப்பு செய்யப்பட்ட "மகோன்னத மிஷனரி மர்காஷிஸ்" நூல் வெளியீட்டு விழா மற்றும் நாசரேத் வரலாற்று கருத்தரங்கு திருமறையூர் மறுரூப சிற்றாலயத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

விழாவில் திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் அவர்களின் ஜெபம் மற்றும் பன்முக அறிமுக உரையுடன் துவங்கியது.

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க செயலாளர் மன்னா செல்வகுமார் வாழ்த்துரை வழங்கி வரலாற்று சங்க சிறப்புகளை எடுத்துரைத்தார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிகே ஜெய்சீலன் அவர்கள் முதல் பிரதியை வெளியிட சபை மூப்பர் ஜெயபால் பெற்றுக் கொண்டார். 
இரண்டாம் பிரதியை வெளியிட ரஞ்சன் வேதராஜ்  பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை குருவானவர் பொன்னுசாமி பெற்றுக் கொண்டார். 

பின்னர் திரு ரஞ்சன் வேதராஜ் நிகழ்த்திய வரலாற்றுப் பேச்சு, ஆர்தர் மர்காஷிஸ் அவர்களின் வாழ்க்கை, சேவை, தமிழ் சமூகத்தின் மேம்பாட்டில் அவர் ஆற்றிய பங்குகளை விரிவாக எடுத்துரைத்தது. முனைவர் அருள்திரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் எழுதிய "மகோன்னத மிஷனரி மர்காஷிஸ்" நூலை சிறப்பு விருந்தினர்களால் வெளியிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசாக வழங்கப்பட்டது.

நூல் வெளியீட்டு விழாவில் திருச்சபை மூப்பர்கள் ஜான்சேகர், லேவி அசோக் சுந்தர்ராஜ், ஆண்ட்ரூஸ், உலகராஜ், மற்றும் சிறப்புரையாளர், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

விழா இறுதியில் திருமறையூர் சேகர தலைவர் ஜாண் சாமுவேல் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துவிட்டு ஆசீர்வாதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்துடன் இணைந்து திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad