SSS கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு!
ராணிப்பேட்டை ஏப் 06 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு SSS கல்லூரியில் ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் வழிகாட்டுதல் பேரில் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் கல்லூரி தாளாளர் அவர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்படடோர் பங்கேற்று போதை விழிப்புணர்வு
பதாகைகள் ஏத்தியவாறு பேரணியாக பஸ் நிலையம் வழியாக SSS கல்லூரி வந்து சேர்ந்தனர். இதில் உதவிஆய்வாளர் வேல்மணி, தலைமை காவலர் சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக