உதகையில் துவங்கியது நாய் கண்காட்சி.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் குழு குழு சீசன் ஆரம்பித்துவிடும். இந்நாட்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மூன்றாம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா இனிதே துவங்கியது. கோடை விழாவில் ஒரு நிகழ்ச்சியாக உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சி இன்று 9- 5 -2025 தொடங்கியது. இந்த நாய்கள் கண்காட்சியில் 55 இனங்களில் 450 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன. கென்னல் கிளப் சார்பில் 135 மற்றும் 136 வது நாய்கள் கண்காட்சி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று முதல் நாளில் நாய்களின் கீழ்படிதல் போட்டியுடன் இனிதே துவங்கியது. இந்த போட்டிகளின் நடுவர்களாக ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு நாய்களின் நடத்தையை மதிப்பிடுவார்கள். மேலும் இப்போட்டியில் கோல்டன் ரெட்ரீவர், கிரேடன், மற்றும் குட் ஷெப்பர்ட் இனங்களின் சிறப்பு கண்காட்சி நடைபெறும்.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக