கரடிக்கல் கிராமத்தில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோவில் திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

கரடிக்கல் கிராமத்தில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோவில் திருவிழா

 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1150 காளைகள், 450 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. டோக்கண்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8மணிக்கு உறுதிமொழி ஏற்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. முதலில் கரடிக்கல்லைச் சேர்ந்த 3 கோவில் மாடுகள் வரிசையாக விடப்பட்டது. கோயில் காளைகள் மரியாதை நிமித்தமாக அவிழ்த்து விடப்பட்டன.
மொத்தம் ஒன்பது சுற்றுக்கள் நடந்த இந்த கரடிக்கல் ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் போட்டியில் 450 மாடு வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல் 450 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்காக கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு தலைமை மருத்துவர் உள்ளிட்ட 5 மருத்துவர்கள் கொண்ட 25 பேர் கொண்ட மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்துக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் 60 பேர் காயம் அடைந்தனர். இதில் 3பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகமலை புதுக்கோட்டை எஸ் எஸ் ஐ ஆனந்தன் மீது எதிர்பாராத விதமாக ஜல்லி கட்டு காளை முட்டிபடுகாயம் அடைந்தார். இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு  தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் சிவஜோதி மற்றும் வட்டாட்சியர்கள் வருவாய்த் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், செக்கானூரணி தலைமை மருத்துவர் உமா மகேஸ்வரி மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீயணைப்பு துறையினர் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான உதவிகளை செய்தனர்.ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காயம் ஏற்பட்டவர்களுக்கு கரடிக்கல் கிராமத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் ஆண்டிச்சாமி, மொக்கராசு, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad