பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளின் இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம்!
குடியாத்தம் , மே 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் குடியாத்தம் வட்டாரத்தில் இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் நடத்தினர். இதில் உமா சங்கர் வேளாண்மை உதவி இயக்குனர் (ADA), சிறப்பு விருந்திராக சம்பத் நாயுடு மற்றும் உதவிபேராசிரியர்கள் வெண்ணி லா மேரி, பிரதீஷ் பாபு மற்றும் பிரபு ஆகி யோர்கள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவி களின் கண்காட்சியை கண்டு மகிழ்ந் தனர். இந்நிக்ச்சியில் பட்டு புழு வளர்ப்பு, ஒருங்கிணைத்த பண்ணை மேலாண்மை பற்றி பயிற்சி அளித்தனர்கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய மாதிரி கள்,பஞ்சகாவியா , மீன் அமிலம் போன்ற இயற்கை இடுப்பொருட்களும் மற்றும் வேளாண் அலுவலகத்தில் விவசாயி களுக்காக கொடுக்கப்படும் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் பற்றி தெரிவித் தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக