ஈரோட்டில் இடி மின்னலுடன் மழை கொட்டும்; மக்களுக்கு எச்சரிக்கை :
தமிழ்நாட்டில் இன்று (மே 14) 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில், இடி, மனின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, கரூர்,கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, தேனி, நீலகிரி, விருதுநகர், மற்றும் தென்காசி ஆகிய 25 மாவட்டங்களிலும் இன்று (மே 14) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக