குடியாத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை போலீசார் விசாரணை!
குடியாத்தம் ,ஜூன் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகரில் வசிக்கும் ராஜேஷ் த / பெ மாசிலாமணி என்பவர் கட்டுமான பணிகளுக்கான ஜல்லி மெஷின் வைத்துக் கொண்டு தொழில் செய்து வருகிறார இவர் இரண்டு தினங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார்கள் அப்போது வீட்டின் பூட்டை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் பீரோவில் வைத்திருந்த நெக்லஸ் ஆரம் கம்மல் மற்றும் வெள்ளி பொருட்கள் 2 ஜதை கால் ஜெயில் 2 ஜதை அருணா கயிறு போன்றவர்களை திருடி சென்று உள்ளார்கள் மேலும் வீட்டில் பொருத் தப்பட்டுள்ள சிசிடி கேமராக்களின் இணைப்பை துண்டித்து விட்டு தப்பி ஓடி உள்ளார்கள் இது சம்பந்தமாக கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக