திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து திருட்டு போலீஸ் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து திருட்டு போலீஸ் விசாரணை.

 


திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து திருட்டு போலீஸ் விசாரணை.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சூப்பரவேசராக பணிபுரிந்து வருபவர் ராஜசேகர்(47). கடையில் விற்பனையாளர்களாக ரவிக்குமார் மற்றும் கொத்தளம் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மே 2ம் தேதி இரவு 10 மணிக்கு கடையை வழக்கம் போல் சூப்பரவேசர் ராஜசேகர் பூட்டி சென்றார். மறுநாள் மே 3ம் தேதி காலை 11.50 மணிக்கும் வழக்கம் போல் கடையை திறக்க சூப்பரவேசர் தலைமையில் ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சூப்பரவேசர் ராஜசேகர் இது குறித்து கப்பலூரில் உள்ள டாஸ்மாக் உதவி மேலாளருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அலுவலக இளநிலை உதவியாளர் சுப்பிரமணி, மற்றும் பாலகிருஷ்ணனும் கடைக்கு சென்று ஆய்வு செய்த போது 58 மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ 15 ஆயிரத்து 240 ஆகும். பின்னர் கடையில் உள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்து பார்த்த போது மே 3ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு அடையாளம் தெரியாத ஒரு குரங்குகுல்லா அணிந்த நபர் டாஸ்டாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad