பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஒன்றிய அரசு உடனே நடைமுறைபடுத்த கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைபின் அகில இந்திய செயற்குழுவில் பங்கேற்க வேலூர் ஆசிரியர்கள் புதுதில்லி பயணம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஒன்றிய அரசு உடனே நடைமுறைபடுத்த கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைபின் அகில இந்திய செயற்குழுவில் பங்கேற்க வேலூர் ஆசிரியர்கள் புதுதில்லி பயணம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஒன்றிய அரசு உடனே நடைமுறைபடுத்த கோரி 
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைபின் அகில இந்திய செயற்குழுவில் பங்கேற்க வேலூர் ஆசிரியர்கள் புதுதில்லி பயணம்!
வேலூர் , ஜூன் 22 -

வேலூர் மாவட்டம் பழைய ஓய்வூதிய
திட்டம் நடைமுறைபடுத்த கோரியும், ஒப்பந்த முறை, தொகுப்பூதிய முறை, மதிப்பூதிய முறை பணியிடங்கள் இரத்து செய்து முறையாக ஊதிய விகிதத்தில் பணியமர்த்த கோருதல் அகில இந்திய 9வது மாநாடு கல்கத்தாவில் நடத்திடுதல் உள்ளிட பொருள் குறித்து புதுதில்லியில் நடைபெற உள்ள இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வேலூரிலிருந்து ஆசிரியர்கள் பயணம். 
இதற்கான வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 21.06.2025 காலை 11.00 மணியளவில் வேலூர் ஆசிரியர் இல்லத் தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜோசப் அன்னையா தலைமையில் நடைபெற்றது.  கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேசிய மற்றும் மாநில செயல்பாடுகள் குறித்து  பேசினார். முன்னதாக தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ். செல்வகுமார்  வரவேற்று பேசினார்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார், மகளிர் அணி ஒருங் கிணைப்பாளர் தா.சிலம்பரசி, இணை ஒருங்கிணைப்பாளர் கே.மஞ்சுளா, ம.யசோதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். மகளிர் அணி  நிர்வாகி கள் ஆ.விஜயலட்சுமி, குமாரி, வினிதா, வே.வரலட்சுமி,  த.மலர்விழி, ர.நிர்மலா, கே.சுமதி, மாவட்ட உயர்மட்டக்குழுஉறுப்பி னர்கள் டி.ஜெயபிரகாஷ், கே.தனசேகர், டி.கிருஷ்ணன், எம்.பூபாலன், ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். புது தில்லியில் நடைபெறும் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செல்லும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனனுக்கு சால்வை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் பாராட்டினர். 
வேலூர் மாவட்ட மகளிர் ஆசிரியர் கருத்த ரங்கம் நடத்திடுவதற்காக மகளிர் ஒருங் கிணைப்பாளராக தா.சிலம்பரசி, இணை ஒருங்கிணைப்பாளர்களாக  கே.மஞ்சுளா, ம.யசோதா ஆகியோர் ஒருமனதாக தேர் தெடுக்கப்பட்டனர்.

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,  இடைநிலை, முதுகலை, தலைமை ஆசிரியர்களின்  ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும் திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2.இம்மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் அகில இந்திய செயற்குழு மற்றும் நிர்வாக குழுவில் பங்கேற்கும் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் அவர்களிடம் மாவட்ட கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து வழியனுப்பி வைப்பது.
3.அகில இந்திய அளவில் 9வது மாநாடு ஆகஸ்டு 8 முதல் 10 வரை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது அதில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்பது.
4.ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டதினையும் புதிய ஓய்வூதிய திட்டத்தினையும் ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்திட இந்திய அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் முனைவர் சி.சுதாகர் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad