காட்டு யானை குட்டிகளுடன் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

காட்டு யானை குட்டிகளுடன் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை.


காட்டு யானை குட்டிகளுடன் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை.   


இன்று 16.06.2025ம் காலை 06.45 மணியாவில் குந்தா வனச்சரகம் அதிகரட்டி பிரிவு மேலூர் காவல் பகுதிக்கு உட்பட்ட கீழ் டெராமியா தொழிற்சாலையின் அருகே 8 யானைகள்  கொண்ட காட்டு யானைகள் ( ஆண் - 2, பெண் - 3, குட்டி -3) கூட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு வன பணியாளர்களால் கண்காணிப்பு  மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்,


 தற்பொழுது காட்டு யானைகள் கூட்டம் குன்னூர் வனச்சரகம் மேலுர் பிரிவு கொலக்கொம்பை காவல் பகுதிக்கு உட்பட்ட கம்மந்து காப்பு காட்டிற்குள் சென்றுள்ளதால் காட்டு யானைகளை தொடர்ந்து வன பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


எனவே டெராமியா எஸ்டேட், கீழ் டெரமியா, தூதுர்மட்டம், அறையட்டி, கெராடா லீஸ ,பகுதி சார்ந்த மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad