பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்


பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் .


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.


பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) காளீஸ்வரி தலைமை வகித்தார். பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி, மாணவிகள் உயர் மதிப்பெண் பெறுவது தொடர்பாக கோரிக்கைகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கிப் பேசினார். 


அப்போது அவர் பேசுகையில், "பள்ளி கழிப்பறை வசதி, மாணவிகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும். மேலும், பள்ளிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிறுத்தம் அமைத்து தரப்படும். உங்களிடம் இருந்து திருட முடியாத சொத்து கல்வி ஒன்றே.. எனவே, மாணவிகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்" இவ்வாறு பேசினார்.


நிகழ்வில், ஓய்வு தலைமை ஆசிரியர் குலாம் கனி, திருப்பதி, பழனிவேல், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


முன்னதாக, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மூவருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரத்தை தனது சொந்தப் பணத்தில் இருந்து ஊக்கப் பரிசாக வழங்கினார்.


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad