மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி
மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி உதகை யூனிக் பப்ளிக் பள்ளியில் இன்று நடைபெற்றது . மேரா யுவ பாரத் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார். யூனிக் பப்ளிக் பள்ளி தலைமையாசிரியர் காயத்திரி தேவி தலைமை வகித்தார். நீலகிரி எஜீகேஷனல் டிரஸ்ட் ஜாபர், மியூசிக் அகாடெமி ஷாம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாணவர்களுக்கு ஒரு மரம் அம்மாவின் பெயரில் என்ற தலைப்பில் கவிதை மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. தில்ஷத் நன்றி நவில, புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக