தூத்துக்குடி மாவட்டம், சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

தூத்துக்குடி மாவட்டம், சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டம், சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தகவல்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ”சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 

உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்க தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வுச் செய்யப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
       
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜீலை-14-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad